கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக சீனாவுக்கு செல்லக்கூடிய ஏர் இந்தியா விமானங்கள், வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
சீனாவில் உள்ள உகான் நகரில் இருந்து உலகம் முழுவதும் கோவிட்-19 பரவி வருகிறது. இந்த நோய் தொற்று காரணமாக சீனாவில் இதுவரை 2,118 பேர் பலியாகியுள்ளதாகவும், 74,576 பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சீனா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், உலக நாடுகளுக்கு இந்த நோய் தொற்று பரவி, பலர் பலியாகி உள்ளனர். இதற்கிடையில், தில்லி-ஷாங்காய் மற்றும் தில்லி-ஹாங்காங் ஆகிய இரு விமானங்களும் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 14 வரை ரத்து செய்யப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் அதன் பின்னர் சீனாவுக்கான விமான சேவை இயக்கப்படவில்லை.
இந்நிலையில், கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக சீனாவுக்கு செல்லக்கூடிய ஏர் இந்தியா விமானங்கள், வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.